தமிழ்நாடு

மணல் கடத்தல் - தடுக்க சென்ற வி.ஏ.ஓ. கடத்தல்...

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் - ஆம்பூர் சாலையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் - ஆம்பூர் சாலையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அனங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அனேஸ்குமார் அப்பகுதியில் மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவரை டிராக்டரில் வந்தவர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு மாதனூர் என்னும் இடத்தில் இறக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் அனேஸ்குமார் அளித்த புகாரை அடுத்து தப்பியோடிய மணல் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி