மழை வேண்டி மருதமலை கோயிலில் 1008 சங்கு பூஜை
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் மழை வேண்டி 1008 சங்கு பூஜை நடைபெற்றது. 1008 சங்குகளில் இருந்த மருத தீர்த்தம் மூலம் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.