தமிழ்நாடு

தென்னங்கன்றுகளை பாதுகாக்க புது யுக்தி

வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் தென்னங்கன்றை பாதுகாக்க விவசாயி ஒருவர் புது யுக்தியை கையாண்டு வருகிறார்.

தந்தி டிவி

மேல்காவனூர் கிராமத்தை சேர்ந்த காசிநிதி, கடந்த 35 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பிய அவர், வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை காப்பாற்றும் விதமாக தென்னை ஓலைகளை கொண்டு வலை அமைத்துள்ளார்.மேலும் அவர் தனது விவசாய நிலத்தில் வாழை, எலுமிச்சை உட்பட பல்வேறு பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தின் மீதான அவரது ஈடுபாட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை