தமிழ்நாடு

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

தந்தி டிவி

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் புடலை, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ தக்காளி விலை 50 ரூபாய்க்கும், வெளி சந்தையில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பீன்ஸ் விலை 70 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 1 கிலோ இஞ்சி விலை 110 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ பச்சை மிளகாய் தற்போது 55 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் பெரிய வெங்காயம் விலை 12 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெயிலால் உற்பத்தி சரிவடைந்ததே காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணமாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி