தமிழ்நாடு

கனமழையால் நிரம்பியுள்ள வேடந்தாங்கல் ஏரி : 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பறவைகள் வருகை தொடங்கி விடும்.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பறவைகள் வருகை தொடங்கி விடும். பருவமழை சரிவர பெய்த பறவைகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில், கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்த கன மழையில், வேடந்தாங்கல் ஏரி நிரம்பி உள்ளது. இதனால் பறவைகளின் வருகையும் தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சைபீரியா, வங்கதேசம் உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் இருந்து, 26 வகையான 50 ஆயிரம் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும், இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன. இந்நிலையில் தற்போது 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வருகை தந்து, வேடந்தாங்கல் ஏரி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு