தமிழ்நாடு

வேடசந்தூர் : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, கண்டெய்னர் லாரி ஒன்று, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நூல் ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் செல்வதற்காக திரும்பியபோது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், லாரியின் கண்டெய்னர் மட்டும் தனியாக கவிழ்ந்து, சாலையின் குறுக்கே கிடந்ததால், 2 மணி நேரத்திற்கும் மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த கண்டெய்னர், கிரேன் மூலம் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு, போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்