மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது மதுரை மேலூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரிடம் நிலத்தை மீட்டுத் தருவதாகக் கூறி 67 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்திய போது புகார்தாரரிடம் பணத்திற்கு பதிலாக 67 பவுன் தங்க நகைகளை திருப்பி அளித்ததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.