தமிழ்நாடு

'வார்தா' புயலில் மாயமான மீனவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு கோரி மனு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வார்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த 2016-ஆம் ஆண்டு வார்தா புயல் வீசியபோது, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதையடுத்து, 9 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த தொகை, இதுவரை வழங்கப்படவில்லை என கூறி, பிரதீப் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, 4 வாரங்களுக்குள் இது குறித்து பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்