தமிழ்நாடு

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவெற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு நடைபெறும் தேதி தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி
திருவெற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு நடைபெறும் தேதி தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், குடமுழுக்கு நடத்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்கள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், மார்ச் 27ம் தேதி நடக்க உள்ள தொல்லியல் குழு கூட்டத்தில் குடமுழுக்கு நடத்த ஒப்புதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடமுழுக்கு நடத்தும் தேதி குறித்து ஏப்ரல் 9-ம் தேதிக்குள் முடிவு எடுத்து தெரிவிக்க நீதிபதி உத்தவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்