தமிழ்நாடு

``என்னது நான் செத்துட்டேனா?’’ - பதறிய பெண்.. சிக்கிய VAO

தந்தி டிவி

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணுக்கு இறப்பு சான்றிதழ் அளித்த வி.ஏ.ஒ உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் இறந்து விட்டதாக கூறி அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா என்பவர் விசாரணை நடத்தாமலே சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தாசில்தார் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் விக்னேஷ், வி.ஏ.ஒ.ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை