தமிழ்நாடு

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வாணியம்பாடியில் கடந்த 21ஆம் தேதி சுகாதாரத் துறை சார்பில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் செய்தியாளர்கள் என 53 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். இதில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கூடியிருந்த குடியிருப்பு பகுதிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும் பெண் காவல் ஆய்வாளருடன் பணிபுரிந்த 37 காவலர்கள் உட்பட வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது காவல் ஆய்வாளர் குடியிருப்பு அருகே வசிக்கும் மக்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்