தமிழ்நாடு

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா - 37 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வாணியம்பாடியில் கடந்த 21ஆம் தேதி சுகாதாரத் துறை சார்பில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் செய்தியாளர்கள் என 53 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். இதில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கூடியிருந்த குடியிருப்பு பகுதிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும் பெண் காவல் ஆய்வாளருடன் பணிபுரிந்த 37 காவலர்கள் உட்பட வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது காவல் ஆய்வாளர் குடியிருப்பு அருகே வசிக்கும் மக்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்