தமிழ்நாடு

19 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பில் சமுதாய கூடம் : சீல் வைக்க வந்த அதிகாரிகளுடன், பொது மக்கள் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, செக்குமேடு பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு அரசு சார்பில் சமுதாய கூடம் ஒன்று கட்டப்பட்டது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, செக்குமேடு பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு அரசு சார்பில் சமுதாய கூடம் ஒன்று கட்டப்பட்டது. இதை 19 ஆண்டுகாலமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, அதன் வருவாயை அரசுக்கு செலுத்தாமல் தானே அனுபவித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவின் பேரில், சமுதாய கூடத்திற்கு சீல் வைக்க வட்டாட்சியர் முருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம், போலீசாரால் பேச்சு வார்த்தை நடத்தி, சமூதாய கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்