தமிழ்நாடு

மதுரவாயல் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா விஜயகுமார்...

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறை பாதுகாப்போடு மதுரவாயல் வீட்டுக்குள் நடிகை வனிதா விஜயகுமார் சென்றார்.

தந்தி டிவி

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீட்டில் அவரது மகள் வனிதா படப்பிடிப்பு நடத்தினார். அதன்பிறகு அவர் வீட்டை காலி செய்யாததால் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். இதையடுத்து வனிதா மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வனிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று வனிதா விஜயகுமார் காவல்துறை பாதுகாப்போடு வீட்டிற்குள் சென்றார். தனக்கு இந்த வீட்டில் உரிமை இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்