Vandavasi | இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு - ஆண் நண்பர் உட்பட 4 பேர் கைது
வந்தவாசி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளம் பெண்ணிடம் 1 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற ஆண் நண்பர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... செய்யாறு பகுதியை சேர்ந்த தமிழரசன், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான தனியார் கல்லூரி பெண் ஊழியருடன் புலிவாய் பகுதியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சிலர் இருவரையும் மிரட்டி, அந்த பெண்ணிடம் இருந்த செயினை பறித்து சென்றுள்ளனர்... போலீசார் நடத்திய விசாரணையில், தமிழரசனே தனது நண்பர்கள் மூலம் நாடகமாடி செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.. இதையடுத்து, தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்