தமிழ்நாடு

நடிகை ஷாலினி வந்த போது விபரீதம் - பராமரிப்பாளரின் கையை கடித்த புலி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகை ஷாலினி குடும்பத்தினருடன் வந்து புலி விளையாட்டை பார்த்த போது, பெண் பராமரிப்பாளரை, குட்டிப்புலி கடித்தது.

தந்தி டிவி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகை ஷாலினி குடும்பத்தினருடன் வந்து புலி விளையாட்டை பார்த்த போது, பெண் பராமரிப்பாளரை, குட்டிப்புலி கடித்தது. கூடுவாஞ்சேரியை சேர்ந்த விஜயா கடந்த 40 வருடங்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் மனைவி நடிகை ஷாலினி மற்றும் குழந்தைகள் பூங்காவுக்கு வந்தனர். அப்போது திடீரென கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன குட்டி புலி அருகிலிருந்த பராமரிப்பாளர் விஜயாவின் வலது கையில் கடித்தது. இதில் காயமடைந்த விஜயாவை உயிரியல் பூங்கா ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்