தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி விழா - ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் துவக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. உற்சவத்தின் முதல்நாளான இன்று காலை நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயகஸ்தரம், முத்து மாலை அலங்காரத்தில், அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அர்ஜூன மண்டபத்தில் மாலை வரை அருள்பாலிக்கும் நம்பெருமாள், இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் வரும் ஜனவரி 5ஆம் தேதியும், அடுத்தநாள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை