தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி விழா - ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் துவக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. உற்சவத்தின் முதல்நாளான இன்று காலை நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயகஸ்தரம், முத்து மாலை அலங்காரத்தில், அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அர்ஜூன மண்டபத்தில் மாலை வரை அருள்பாலிக்கும் நம்பெருமாள், இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் வரும் ஜனவரி 5ஆம் தேதியும், அடுத்தநாள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி