தமிழ்நாடு

வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் : தண்ணீரில் மூழ்கிய விளை நிலங்கள்,நெற்பயிர்கள்

மதுரை சோழவந்தான் வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுவதால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தந்தி டிவி
மதுரை சோழவந்தான் வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுவதால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளான காடு பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..