சுதந்திர தினத்தன்று தனது முதல் சேவையை தொடங்கிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில், இன்று 49-வது பிறந்தநாளை கொண்டாடியது. மதுரை ரயில் நிலையத்தில் ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் ஒன்றுகூடி, ரயிலுக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, தீபம் காட்டி, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.