தமிழ்நாடு

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு 300 கனஅடி நீர் மட்டுமே திறப்பு

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்துக்கு இரண்டாயிரத்து 60 கனஅடி நீர், திறக்கப்பட்டதால், அணை நிரம்புவதில் தாமதம் ஏற்படும் நிலை இருந்தது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாசனத்துக்கான நீரின் அளவு, 300 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அறுபத்து நான்கரை அடி தண்ணீர் உள்ள வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், விரைவில் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி