தமிழ்நாடு

பர்தா அணிந்து வந்து ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : சிக்க வைத்த ஆண்கள் ஹெல்மெட்

கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க வந்த இளைஞர், நள்ளிரவில் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கினார்.

தந்தி டிவி
கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க வந்த இளைஞர், நள்ளிரவில் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கினார். வடிவேலு காமெடியில் வரும், மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்த கதை போல, சென்னை வேளச்சேரியில் நடந்த கொள்ளை முயற்சி பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு... வேளச்சேரி 100 அடி சாலையில், நள்ளிரவில், ஏ.டி.எம். ஒன்றின் அருகே பர்தா அணிந்த பெண் ஒருவர் தனியாக நின்றிருந்தார், ரோந்து போலீசார் வருவதை கண்ட அவர், திடீரென தலைதெறிக்க ஓடினார். சந்தேகமடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்த போது, அது பெண் வேடத்தில் இருந்த ஆண் என்பது தெரியவந்தது. விசாரணையில், வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்யும் ராஜ்குமார் எனும் 24 வயது இளைஞர் என்பதும், கடனை அடைக்க, இரவுக் காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம்மை உடைக்க வந்ததும் தெரியவந்தது. பெண் வேடத்தில் நின்ற ராஜ்குமாரை சிக்க வைத்தது, அவர் அணிந்திருந்த ஆண்கள் அணியும் ஹெல்மெட் தான் என்பது ருசிகரம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை