தமிழ்நாடு

போக்குவரத்து பணிமனையில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு ஓட்டுனர்கள் அஞ்சலி

வடபழனி பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்த பேருந்து ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது மோதியது.

தந்தி டிவி

வடபழனி பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு வந்த பேருந்து ஒன்று திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது மோதியது. அப்போது சுவர் அருகே நின்று கொண்டிருந்த, சேகர், பாரதி ஆகிய 2 ஊழியர்கள், உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த, தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று காலை, வடபழனி பணிமனையில், உயிரிழந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விபத்தில் இறந்த பாரதிக்கு இந்த மாதம் 6ம் தேதி தான் திருமணமானது திருமணமான 22 நாட்களிலேயே பாரதி உயிர் இழந்தது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், ஓட்டுனர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி