தமிழ்நாடு

வடபழனி தீ விபத்து வழக்கு : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

2017ஆம் ஆண்டு வடபழனியில் தீ விபத்துக்குள்ளான கட்டடம் இடிக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சம்பத் அடங்கிய அமர்வு, தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்காதது ஏன்? சட்டவிரோத கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என கேள்விகளை அடுக்கியது. மேலும், இந்த விபத்து தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி