சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சம்பத் அடங்கிய அமர்வு, தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்காதது ஏன்? சட்டவிரோத கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என கேள்விகளை அடுக்கியது. மேலும், இந்த விபத்து தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.