தமிழ்நாடு

UPSC முதல் நிலை தேர்வு - அதிர்ச்சியை ஏற்படுத்திய கேள்விகள்

தந்தி டிவி

நாடு முழுவதும் நடந்த UPSC முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. அதில், இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு, பெரியார் ராமசாமி என்ற பெயருடன் நாயக்கர் என சாதி பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாட்கள் வைத்து கொள்ளலாம், நீதிமன்றத்திற்கு ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இத்துடன், சென்னை மண்ணடியில் அமைக்கப்பட்ட UPSC முதல்நிலை தேர்வு மையத்தில், வழிகாட்டு நெறிமுறைகள் இந்தியில் மட்டுமே ஒட்டப்பட்டு இருந்ததால் தேர்வர்கள் சிரமம் அடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை