தமிழ்நாடு

அடங்காத காமவெறி... அடுத்த ஆளுக்கு தாவிய பெண் -2 வயது குழந்தை முன் அரங்கேறிய கொடூரம்

தந்தி டிவி

தகாத உறவில் இருந்த தாயை, குழந்தையின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்த ஆண் நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்தவர் சுந்தர்.

எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்துவரும் இவருக்கு தாரணி என்பவருடன் திருணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சுந்தரின் பள்ளி நண்பரான சுதன் என்பவர், அடிக்கடி நண்பணின் வீட்டிற்கு வந்து சென்றபோது, தாரணியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுந்தர், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனிடையே சுதனின் நடவடிக்கையை பிடிக்காத தாரணி, அவரிடம் இருந்து விலகி வேறு ஒருவருடன் நெருக்கம் காட்டி வந்திருக்கிறார். இதனை அறிந்த சுதன் ஆத்திரத்தில் தாரணி வீட்டிற்கு சென்று இருக்கிறார். வீட்டில் தனியாக இருந்த தாரணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுதன், திடீரென அரிவாள்மனையால் 2 வயது குழந்தையின் கண் முன்னே சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே தாரணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், காவல்நிலையத்தில் சுதன் சரணடைந்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்