தமிழ்நாடு

உடுமலை சங்கர் கொலை வழக்கு - விசாரணை பிப்.27க்கு தள்ளிவைப்பு

உடுமலை சங்கர் கொலை குற்றவாளிகள் மேல்முறையீடு வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

கடந்த 2016ல் நடந்த உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து, தண்டனை பெற்ற குற்றவாளிகள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை, வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை பிப்ரவரி 27ம் தேதி தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்