"விரைவில் அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலை ஏற்படும்"
விரைவில் அதிமுகவை ஐசியூவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில், தரை மற்றும் 6 தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை, மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக-வை ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.