மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, வடிவேல்கரை உள்ளிட்ட 9 இடங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.