தமிழ்நாடு

அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : "தடையை மீறி நடத்தப்படும்" - உதயகுமார்

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கதக்கது என்றும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடன்குளத்தில் அணு அழுத்தத்தை கண்காணிக்கும் சென்சார்கள் 2 ஆண்டுகளாக செயல்படவில்லை என, வெளிநாட்டு பத்திரிக்கை தெரிவிக்கிறது என்றார். கூடங்குளம் அணு உலை பற்றி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை