குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் இந்த டாரஸ் லாரிகளை அங்கு இயக்கத் தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.