தமிழ்நாடு

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...

ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஓமலூர் அருகே அழகுசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் தேங்காய் நார் நிறுவனம், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து தண்ணீரை ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு டிராக்டர்களை சிறைபிடித்து , கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் , அனுமதி இல்லாமல் தண்ணீரை விற்பனை செய்ததாக இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்