தமிழ்நாடு

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...

ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஓமலூர் அருகே அழகுசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் தேங்காய் நார் நிறுவனம், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து தண்ணீரை ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு டிராக்டர்களை சிறைபிடித்து , கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் , அனுமதி இல்லாமல் தண்ணீரை விற்பனை செய்ததாக இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு