தமிழ்நாடு

நீச்சல் பழகும் முயற்சி - கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படிக்கச் சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சதுப்பேரி பாளையம் கிராமத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், படிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றனர். அவர்களில் மோனிஷா, சிவரஞ்சனி ஆகிய இருவரும் அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் இறங்கி நீச்சல் பழக முயன்று, நீரில் மூழ்கினர். மற்ற மாணவிகள் அவர்களை காப்பாற்ற முயன்றும் பலனிக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 2 மாணவிகளையும் சடலமாக மீட்டனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு