தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் - இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது

எல்லைதாண்டி மீன்பிடித்த இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி

எல்லைதாண்டி மீன்பிடித்த இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடல் எல்லை பரப்பில் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக பைஃபர் படகில் வந்த 2 பேரிடம் கடற்படையினர் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அவர்கள், இலங்கை வல்வெட்டுத்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த நிமலதாஸ் மற்றும் கஜீபன் என்பதும், எல்லை தாண்டி மீன்பிடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து, நாகை துறைமுகத்துக்கு அதிகாலை கடற்படையினர் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை