தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தந்தி டிவி

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன், சசிகலா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபல் வாதங்களை முன்வைத்தார். அதிமுகவில் கட்சியின் அடிப்படை விதி 43-ஐ மாற்றி விட்டதாக தெரிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்திற்கு மதிப்பளிப்பதாக கூறினர். இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதே வேளையில் 1 வாரத்துக்குள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு