தமிழ்நாடு

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

சென்னை மாதவரத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

சென்னை மாதவரத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் உள்ள மதுபானகடையில் நேற்றிரவு 8 மணியளவில் இளைஞர் ஓருவர் 500 ரூபாய் கொடுத்து மதுபானம் கேட்டுள்ளார். விற்பனையாளருக்கு சந்தேகம் வர அவரிடம் விசாரித்துள்ளார். இதனை அடுத்து ஓட்டம் பிடித்த நபரை , பொது மக்கள் உதவியுடன் பிடித்து மாதவம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். பிடிபட்டசுப்பரமணி கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தபட்ட ஜெராக்ஸ் எந்திரம் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் போன்றவற்றை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து சாகுல் அமீது மற்றும் ரெஜீனா ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை