தமிழ்நாடு

Chennai | பெட்ரோல் பங்கில் இருந்து காரை தூக்கி சென்ற இருவர் | பேருதவியாக உள்ளே இருந்த அந்த பொருள்

தந்தி டிவி

பெட்ரோல் பங்கில் இருந்து காரை திருடிச் சென்ற இருவர் கைது

சென்னை வியாசர்பாடியில் பெட்ரோல் பங்கிற்கு டீசல் நிரப்ப வந்த சொகுசு காரை, குடிபோதையில் இருந்த இளைஞர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடியில் மெல்வின் என்பவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் நிரப்பி விட்டு, காரில் இருந்து இறங்கி பணம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த 2 பேர், காரை எடுத்துக் கொண்டு தப்பினர்.

மெல்வினின் செல்போன் காரில் இருந்ததால், அதை வைத்து போலீசார் தேடியதில், அந்த கார் கும்மிடிப்பூண்டி வரை சென்று விட்டு, மீண்டும் புழல் வரை வந்து நின்றது தெரியவந்தது.

கார் பழுதானதால், அவர்கள் காரை நிறுத்தி விட்டு, செல்போன்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மீண்டும் செல்போன் எண்ணை வைத்து தேடிய போலீசார், காரை எடுத்துச் சென்ற கண்ணதாசன் நகரை சேர்ந்த சூர்யா மற்றும் அவருடைய நண்பர் பரத் ஆகியோரை கைது செய்ததோடு, காரை மீட்டு மெல்வினிடம் ஒப்படைத்தனர்

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு