கிடைத்தது `கிரீன் சிக்னல்’ - சம்பவத்துக்கு ரெடியாகும் தவெக..
பெரம்பலூரில் வரும் செப்டம்பர் 13ம் தேதி, தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் N.ஆனந்த் மனு அளித்தார். அப்போது, தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். பெரம்பலூரில், தவெகவினர் மேற்கு வானொலி திடல் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து தவெக மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.