சேப்பாக்கம் மைதானத்தில் தவெக கொடியை காட்டிய இளைஞர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக்கோப்பை போட்டியின்போது தவெக கொடியை அசைத்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொடியை அசைத்த இளைஞர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என தெரியவந்துள்ளது. தவெக கொடியை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதனை மறைத்து மைதானத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். தான் தவெக தொண்டர் அல்ல, விஜய் ரசிகர் என அவர் கூறிய நிலையில் விதிகளை மீறி செயல்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.