சேலம் தவெக கூட்டத்துக்கு வந்த தொழிலாளர் மரணம், நிதி கோரி முற்றுகை சேலத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த சுராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. கட்சி சார்பில் எந்த நிதி உதவியும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அவரது குடும்பத்தினர் உடலை பெற மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.