தமிழ்நாடு

முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகிலுள்ள வீரபண்டியன்பட்டிணம் மீனவ கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு மட்டும், பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. மற்ற பகுதிகளுக்கு மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும், தாமிரபரணி பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்