ஸ்ரீவைகுண்டம் நாலுமாவடியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் கைத்தொழில் ஆசிரியராக பணிபுரிபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து ஆசிரியர் முத்துப்பாண்டியை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.