தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு விழா

குற்றவாளிகளுக்கு காப்பு போட்டே பழக்கப்பட்ட போலீஸ் ​அதிகாரிகள், பெண் காவலர் ஒருவருக்கு நடத்திய வளைகாப்பு விழா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருகிறார். உறவினர்கள் அனைவரும் வெளியூரில் இருப்பதால், கர்ப்பமாக இருக்கும் மகாலட்சுமி, வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து வேதனையில் இருந்திருக்கிறார். இதனை அறிந்த ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள், மகாலட்சுமிக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சீர்வரிசை தட்டுக்களுடன் 5 வகையான சாதங்கள் செய்து, தடபுடலாக, மகாலட்சுமியின் வளைகாப்பு நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக காவல் நிலையங்களில் காதல் திருமணங்கள் நடத்தப்படும். ஆனால், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு