தமிழ்நாடு

புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் - வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டனர்.

தந்தி டிவி

புதுச்சேரி கடற்கரை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை சமூக விரோதிகள் சிலர் திருடி ஆமை முட்டைகளில் மருத்துவ குணம் உள்ளது என்று கூறி விற்று விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் புதுச்சேரியை ஓட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுகுப்பம் கடற்கரை மணற்பரப்பில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட அலீவ் ரிட்லி வகை ஆமை முட்டைகளை வனத்துறையினர் மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்