திருச்சி மக்களவை தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டமானை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2014 மக்களவை தேர்தலில் பா.ஜ.க வுடன், ஜெயலலிதா கூட்டணி வைக்காததால் தான், தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் என்று தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.