திருப்பதி திருமலை பள்ளத்தாக்கில் குதித்த பக்தர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கார் கோவில் பகுதியில் சுமார் 100 அடி ஆழ பள்ளத்தாக்கில் பக்தர் ஒருவர் குதித்ததாக தேவஸ்தான விஜிலன்ஸ் துறைக்கு புகார் வந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் செகந்திராபாத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.