தமிழ்நாடு

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்

கரூர் அருகே இளைஞர் ஒருவர், வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில், இளைஞர் ஒருவர் திடீரென வீச்சரிவாள் மற்றும் கோடாரியுடன் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்டார். சசிகலாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிட்ட அவர், அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் , அந்த நபரின் சகோதரர் அங்கு வந்து அவரை அடித்து இழுத்துச் சென்றார். இந்த சம்பவம் காரணமாக திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு