தமிழ்நாடு

கல்லூரியில் கருத்தரங்கு சார்பாக கட்டுரை போட்டிகள் - கருத்தரங்கை ரத்து செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தந்தி டிவி
திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரியும், கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கல்லூரியில் தமிழ் துறை சார்பில் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற மைய கருத்தில் கருத்தரங்கம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு நடைபெற இருந்த கட்டுரைப் போட்டிகளின் சில தலைப்புகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கஜா புயல் மீட்பு பணிகளுக்கு மாணவர்கள் சென்றிருந்ததால் கருத்தரங்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்