தமிழ்நாடு

நகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு

கொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருச்சி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 கிலோ தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி திருச்சியில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் கனகவள்ளி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . பெங்களூருவில் சரண் அடைந்த முருகன் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு போலீசார் காவிரி கரையில் புதைக்கப்பட்டிருந்த நான்கு கோடியே 30 லட்சம் மதிப்புடைய 12 கிலோ நகைகளை மீட்டனர் . அந்த நகைகளை முதலில் பெங்களூரு நீதிமன்றத்திலும் பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் மதுரை சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன்,கணேசன் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ