திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7ம் நாளில் நம்பெருமாள் மற்றும் ஆண்டாள் முத்துக்கொண்டை அணிந்து, வைரக்கல் திருவாபரணங்கள் சூடி காட்சியளித்தனர். மூலஸ்தானத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுனமண்டபத்தில் பன்னிரு ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளிய நம்பெருமாளை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.