தமிழ்நாடு

நகர்த்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை... ஸ்ரீரங்கத்தில் அடியார்கள் போராட்டம் - பரபரப்பில் திருச்சி

தந்தி டிவி

ஸ்ரீரங்கம் கோயிலில் இடம் மாற்றி வைக்கப்பட்ட கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி 200க்கும் மேற்பட்ட அடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் கோயில் ஆரியபடாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சநேயா் சிலை உள்ளது. மிகவும் பழைமையான இந்த சிலை, கடந்த 2015-ஆம் ஆண்டு கோயில் நிா்வாகத்தால் நகா்த்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெருமாள் அடியாா்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், சிலையை அதே இடத்தில் நிறுவக் கோரியும், கம்பத்தடி ஆஞ்சநேயா் சிலை அருகே பெருமாள் அடியாா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பெருமாள் பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடியார்களிடம் காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை