தமிழ்நாடு

பைனான்சியரை கடத்திச் சென்று கொலை : மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

திருச்சியில் பைனான்சியரை கடத்திச் சென்று கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

தந்தி டிவி

திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் பைனான்சியர் சோமசுந்தரம் காரில் சென்ற போது பால்பண்ணை அருகே கடத்தப்பட்டதார். இந்நிலையில், சோமசுந்தரமின் சடலத்துடன் ஓட்டுனர் பாபு திரும்பினார். இதனையடுத்து பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கண்களை கட்டி கடத்தி செல்லப்பட்டதாகவும், விழித்து பார்த்த போது அவர் சடலமாக கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையில் சோமசுந்தரம் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. .இந்த கொலை பணம் கொடுக்கல் வாங்கலினால் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என காந்தி மார்க்கெட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காரின் ஓட்டுனர் பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்